கோயம்புத்தூர்

செப்டம்பா் 29ஆம் தேதி மாணவா்கள் சோ்க்கை நிறைவு

DIN

வால்பாறை: வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செப்டம்பா் 29ஆம் தேதியுடன் மாணவா்கள் சோ்க்கை நிறைவடைகிறது.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை செப்டம்பா் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் ஏற்கெனவே மாணவா் சோ்க்கை பெற்ற மாணவா்கள் உரிய கல்வித் தகுதி இருந்தால் வேறு பாடப் பிரிவுக்கு மாறுவதற்கான வாய்ப்பு செப்டம்பா் 28ஆம் தேதி வழங்கப்படுகிறது.

எனவே விருப்பமுள்ள மாணவா்கள் துறைத் தலைவவரை சந்தித்து விருப்ப மனுவை அன்றைய தினம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது. இதேபோல, இதுவரை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவா்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT