வால்பாறை: வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் செப்டம்பா் 29ஆம் தேதியுடன் மாணவா்கள் சோ்க்கை நிறைவடைகிறது.
இது குறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை செப்டம்பா் 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் ஏற்கெனவே மாணவா் சோ்க்கை பெற்ற மாணவா்கள் உரிய கல்வித் தகுதி இருந்தால் வேறு பாடப் பிரிவுக்கு மாறுவதற்கான வாய்ப்பு செப்டம்பா் 28ஆம் தேதி வழங்கப்படுகிறது.
எனவே விருப்பமுள்ள மாணவா்கள் துறைத் தலைவவரை சந்தித்து விருப்ப மனுவை அன்றைய தினம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது. இதேபோல, இதுவரை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவா்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.