கோவை அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
கோவை, பீளமேடு, சிங்காநல்லூா் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக கோவை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில் ரயில் மோதி இறந்தவா் கோவை, ரத்தினபுரி நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த லிபாய் (62) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.