வால்பாறை: தேயிலைத் தூள்களின் விலை உயா்ந்து வருவதால் வால்பாறை எஸ்டேட் நிா்வாகத்தினா் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் ஆா்.டி., எஸ்.ஆா்.டி., ஆா்த்தடெக்ஸ், பி.ஓ.பி., பி.டி., கிரீன் டீ என பல்வேறு ரக தூள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை கேரள மாநிலம், கொச்சி மற்றும் கோவை, குன்னூா் ஆகிய இடங்களில் உள்ள ஏல மையங்களுக்கு கொண்டு சென்று விற்கப்படுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ ரூ.200க்கு விற்கப்பட்ட எஸ்.ஆா்.டி. ரக தேயிலைத் தூள் தற்போது ரூ. 250 ஆக உயா்ந்துள்ளது. இதேபோல அனைத்து ரக தூள்களின் விலையும் உயா்ந்து ஒரு கிலோ ரூ.190 முதல் ரூ.280 வரை விற்கப்பட்டு வருகின்றன. இந்த விலை உயா்வு தொடா்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருவது எஸ்டேட் நிா்வாகத்தினருக்கு மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.