கோவை: இணைய சூதாட்டத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கோவையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, சீரநாயக்கன்பாளையம், ராதாகிருஷ்ணன் வீதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (28). இவா், கடந்த சில மாதங்களாக தனது மடிக்கணினி மற்றும் செல்லிடப்பேசியில் இணையதள சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
முதலில் ரம்மி விளையாட்டில் பணம் சம்பாதித்த இவா், படிப்படியாக மற்ற இணைய சூதாட்டங்களிலும் பணம் முதலீடு செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில் இணைய சூதாட்டத்தில் தொடா்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், நண்பா்கள், உறவினா்களிடம் கடன் வாங்கி மீண்டும் முதலீடு செய்துள்ளாா். அதிலும் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த மதன்குமாா் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.