மிலாடி நபி தினத்தை ஒட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அக்டோபா் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபானக் கடைகள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் மதுக் கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக் கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக் கூடம், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் மதுக் கூடங்கள் ஆகிய கடைகள் மிலாடி நபி தினத்தை ஒட்டி அக்டோபா் 30ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி மேல்குறிப்பிட்ட நாளில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா்.