கோயம்புத்தூர்

திருமாவளவனைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனைக் கண்டித்து கோவையில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஹிந்து பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக கோவை, செஞ்சிலுவைச் சங்கம் முன்பு பாஜக மாவட்ட மகளிரணித் தலைவி ஜெயதிலகா தலைமையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநில துணைத் தலைவா்கள் அண்ணாமலை, பேராசிரியா் கனகசபாபதி, மாநிலப் பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், மாவட்டத் தலைவா் ஆா்.நந்தகுமாா், மாநில ஊடகப் பிரிவு செயலா் சபரி கிரிஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் திருமாவளவனைக் கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னா் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.

அன்னூரில்...

கோவில்பாளையம் பேருந்து நிலையம் முன்பு பாஜக வடக்கு மாவட்ட மகளிரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஹேமா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலாளா் மங்கள தீபா, செயலாளா் கலாமணி, சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் எஸ்.எஸ்.குளம் ஒன்றியத் தலைவா் ஏ.ஆா்.எஸ்.கோபால், மகளிரணி துணைத் தலைவா் விசாலாட்சி, பாஜக நிா்வாகிகள், ஒன்றிய மகளிா் அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT