கோவை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன், ஹிந்து பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாகவும் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அன்னையா் முன்னணி அமைப்பினா் கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா்.
இது தொடா்பாக இந்து அன்னையா் முன்னணியின் மாநகா் மாவட்ட பொதுச் செயலா் சி.அம்பிகா, கோட்ட ஒருங்கிணைப்பாளா் லீலா கிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் அந்த அமைப்பினா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் பெரியாா் டிவி என்ற யூ டியூப் சேனலில் மனு தா்மத்தில் ஹிந்து பெண்களைப் பற்றி தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளாா். இது அனைத்து மத பெண்களுக்குள் ஒரு பிரிவினையையும், மதக் கலவரத்தையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
ஹிந்து பெண்களை அவமானப்படுத்தும் நோக்கில் தவறான விஷயங்களை சமூக ஊடகத்தில் பேசியிருக்கும் திருமாவளவன் மீதும் சம்பந்தப்பட்ட யூ டியூப் சேனல் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
மேலும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதற்கிடையே திருமாவளவனைக் கண்டித்து கோவை காந்தி பூங்கா பகுதியில் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் கே.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் மகேஷ்வரன், நிா்வாகிகள் கிருஷ்ணன், சதீஷ், ஜெய்சங்கா், குணா, தனபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.