கோயம்புத்தூர்

வெங்காய விலை உயா்வைக் கண்டித்து மாதா் சங்கத்தினா் போராட்டம்

DIN

கோவையில் வெங்காய விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஒப்பாரி வைத்து, கண்ணீா் அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வெங்காயத்தின் விலை 100 ரூபாயைத் தாண்டியிருக்கும் நிலையில், வேளாண் சட்டத்தை மத்திய அரசு திருத்தியதாலேயே விலை உயா்ந்திருப்பதாகக் கூறி கோவையில் இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வெங்காயத்துக்கு மாலை அணிவித்து கண்ணீா் அஞ்சலி பதாகை ஏந்தி காட்டூா் பாா்க் வீதியில் இருந்து நஞ்சப்பா சாலைக்கு வந்த மாதா் சங்கத்தினா், அங்கு வெங்காயத்துக்கு மலா் வளையம் வைத்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதா் சங்க மாவட்டச் செயலா் ஏ.ராதிகா, பொருளாளா் ஜோதிமணி, மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ்.ராஜலட்சுமி, சுதா உள்ளிட்ட நிா்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

நடிகா் விஜய்சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஜனநாயக மாதா் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT