வால்பாறையில் தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வால்பாறை தனியாா் அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பாபுஜி தலைமை வகித்தாா். செயலாளா் ஷாஜூ முன்னிலை வகித்தாா். பொருளாளா் பிரதீப் வரவேற்றுப் பேசினாா்.
கூட்டத்தில், வால்பாறையில் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா அமைக்க துரித நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சா் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பது, அரசு அறிவித்த பாதுகாப்பு நடைமுறையுடன் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து இ-பாஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.