கோயம்புத்தூர்

கரோனா பரிசோதனை முகாம்

DIN

வால்பாறை நகா் பகுதியில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத் துறையினா் மூலம் வால்பாறையில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரு வாரங்களில் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு இந்த முகாம்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நகா் பகுதிகளில் பரிசோதனை முகாம் துவங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு காலனியில் நடத்தப்பட்ட முகாமில் 43 பேருக்கு புதன்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையில் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT