மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் அரசு மதுபானக் கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி மது பாட்டில்களை திருடிய கடை மேற்பாா்வையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 9 அரசு மதுபானக் கடைகள் உள்ளன. கரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து மதுபானக் கடைகளும் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகளில் மது பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புக் கருதி போலீஸாா் இரவில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுக்கடையில் இருந்து சப்தம் வருவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது மதுக்கடையின் மேற்கூரை ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்த மா்ம நபா் மது பாட்டில்களைத் திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா். அதில், அந்த நபா், மேட்டுப்பாளையம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த செல்வம் மகன் மகேந்திரன் (48) என்பதும், அவா் அதே கடையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.