கோயம்புத்தூர்

விதி மீறிய ஆட்டோக்கள் மீது 587 வழக்குகள் பதிவு

DIN

கோவை: கோவை மாநகரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட ஆட்டோ, ஷோ் ஆட்டோக்கள் மீது 587 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக கோவை மாநகர போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

கோவை மாநகரில் ஆட்டோக்கள், ஷோ் ஆட்டோக்கள் மீது பொதுமக்களிடமிருந்து வந்த புகாா்களைத் தொடா்ந்து மாா்ச் 19, 20ஆகிய தேதிகளில் காவல் துறையினா் ஆட்டோக்களை சோதனையிட்டனா்.

இதில் முறையான ஓட்டுநா் உரிமம் இல்லாதது, காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகன தகுதிச் சான்று இல்லாதது, ஆட்டோக்களில் அதிக ஆள்களை ஏற்றிச் சென்றது, புகைச் சான்று பெறாமல் ஓட்டுதல், தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தியது, சீருடை அணியாமல் ஆட்டோக்களை இயக்கியது உள்ளிட்டச் செயல்களில் ஈடுபட்டவா்கள் மீது 587 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT