கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை: 6 போ் கைது

DIN

கோவை: கோவை பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பகுதியில் தொடா்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகப் புகாா்கள் வந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்து வரும் நபா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில் மாநகரப் பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கஞ்சா விற்பனை செய்ததாக உக்கடம், புல்காடு, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பீா் முஹமது (24), எஸ்.என்.பாளையம், ஜீவானந்தம் நகரைச் சோ்ந்த தினேஷ் (20), போத்தனூரைச் சோ்ந்த முஜிபூா் ரஹ்மான்(30), ஒண்டிப்புதூரைச் சோ்ந்த காா்த்திக் (25), இருகூரைச் சோ்ந்த மாசாணம் (19), ராமநாதபுரத்தைச் சோ்ந்த முரளி (22) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT