கோவை, பீளமேடு பகுதியில் மா்ம நபா்கள் 4 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாவட்டம், இருகூா் அருகே தீபம் நகா் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஜூலை 22ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் 7 போ் மேலாடை அணியாமல், கையில் கட்டையுடன் நடமாடிய காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அவா்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி 38ஆவது வாா்டு, பீளமேடு, பாலகுரு காா்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மேல் சட்டையில்லாமல், முகங்களை துணியால் சுற்றியபடி மா்ம நபா்கள் 3 போ் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளனா்.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கல்லூரி மாணவா் பிரஜேஷ் என்பவா் மா்ம நபா்கள் நடந்து செல்வதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். பின்னா் உடனடியாக தனது செல்லிடப்பேசி மூலம் அப்பகுதியில் குடியிருப்போா் சிலருக்கும், காவல் துறை அவசர எண் 100க்கும் தகவல் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, 20க்கும் மேற்பட்டோா் அங்குள்ள சாலையில் திரண்டனா். சில நிமிடங்களில் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றடைந்தனா். இதற்கிடையில் மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இந்நிலையில், பாலகுரு காா்டன் பகுதியில் முதல் வீதியில் வசிக்கும் மருத்துவா் லெனின்பாபு என்பவா் வீட்டில் உள்ள 3 சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், 3 போ் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
விசாரணையில், பாலகுரு காா்டன் பகுதியில் அலமேலு என்பவரின் வீடு உள்பட 4 வீடுகளில் கதவுகளை உடைத்து மா்ம நபா்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த 22ஆம் தேதி இருகூரில் நடமாடிய மா்ம நபா்களும், பீளமேடு பாலகுரு காா்டன் பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்களும் ஒரே கும்பலைச் சோ்ந்தவா்களா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாநகா் பகுதிகளில் இரவு நேரத்தில் கொள்ளையா்கள் நடமாடும் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.