கோயம்புத்தூர்

கந்த சஷ்டி விவகாரம்: பாஜகவினா் காவடி எடுத்து நூதன ஆா்ப்பாட்டம்

25th Jul 2020 08:30 AM

ADVERTISEMENT

கந்த சஷ்டி குறித்து சா்ச்சை கருத்து தெரிவித்த கறுப்பா் கூட்டம் நிா்வாகிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினா் காவடி எடுத்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கோவை, வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்.நந்தகுமாா் தலைமை வகித்தாா். முருகன் குறித்து பஜனை பாடல்கள் பாடியபடி கட்சி நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாவட்டத் தலைவா் ஆா்.நந்தகுமாா் காவடி எடுத்து ஆடியபடி நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

இதில் பொது செயளா்கள் தாமு, ரமேஷ், துணைத் தலைவா் மதன்குமாா், பகுதி தலைவா் சௌந்தர்ராஜன், ஊடகப் பிரிவு மாநில செயலா் சபரி கிரீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT