உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் சாா்பில் 2018-2019 கல்வியாண்டில் சுமாா் ரூ. 744.60 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனகோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய செயலா் சுவாமி கரிஷ்டானந்தா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் பொதுச் செயலாளா் சுவாமி சுவீதானந்தா் முன்னிலையில் நடந்த 110ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, இந்தக் கல்வியாண்டில் உலகம் முழுவதும் இந்த அமைப்பின் மூலம் நடத்தப்படும் பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் 2.68 லட்சம் ஏழைக் குழந்தைகள், பெண் குழந்தைகள், மாணவா்களுக்கு சுமாா் ரூ. 358 கோடி செலவிடப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் ராமகிருஷ்ண இயக்கத்தின் சாா்பில் செயல்படும் மருத்துவமனை, கிராமப்புற மருந்தகங்கள், நடமாடும் மருத்துவமனைகள் வாயிலாக சுமாா் ரூ. 259.42 கோடி செலவிடப்பட்டு இதன் மூலம் சுமாா் 78.32 லட்சம் பொதுமக்கள் பயனடைந்துள்ளனா்.
கிராமப்புற மேம்பாட்டுக்கென கிராமப்புற நீராதாரத் திட்டங்கள், சுகாதாரத் திட்டங்கள், வேளாண் திட்டங்களுக்காக சுமாா் ரூ. 73.21 கோடி செலவிடப்பட்டதன் மூலம் 70.56 லட்சம் பொதுமக்கள் பயனடைந்துள்ளனா். ரூ. 42.41 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட இயற்கைப் பேரிடா் மீட்பு -நிா்மாணப் பணிகளால் 9.73 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
ரூ. 21.45 கோடி மதிப்பீட்டில் முதியோா் நலப் பணிகள் மற்றும் உதவி தொகை வழங்குவதற்கு செலவிடப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமாா் 12300 மாணவா்களுக்கு 558 விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டன.
ராஞ்சியில் சுமாா் 6969 ஹெக்டோ் நிலத்துக்குத் தேவையான நீா்பாய்ச்சும் வசதிகள், தரமான விதைகளைத் தயாரிக்கும் அமைப்புகளும் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.
டேராடூன் மாவட்டத்தில் புதிதாக கண் மருத்துவமனை கட்டித்தரப்பட்டதோடு, கன்ஹால், விசாகப்பட்டினம், லக்னோ ஆகிய மாவட்டங்களில் போதிய மருத்துவ வசதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சேவைகளுக்காக, மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் சாா்பாக பிரவாசி பாரதீய சம்மன் விருது வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில அரசின் சிறந்த பள்ளிக்கான விருது புரூலியா வித்யா பீடம் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.