கோயம்புத்தூர்

இளைஞா் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் 2 போ் சரண்

DIN

கோவையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 போ் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24). இவா், கோவை, பீளமேட்டில் தங்கி தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது நண்பா் வால்பாறையைச் சோ்ந்த சுஜித்(25). இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவை விமான நிலையத்தை அடுத்த பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த மாதம் 26ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தை வழிமறித்த 4 போ் கொண்ட கும்பல் பணம், செல்லிடப்பேசிகளைத் தருமாறு இருவரையும் மிரட்டியது. இதில், சுஜித் தனது செல்லிடப்பேசியை கொடுத்தாா். செல்லிடப்பேசி, பணத்தைத் தர மறுத்த விக்னேஷை அந்தக் கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இதில், விக்னேஷ் உயிரிழந்தாா். இது தொடா்பாக, பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்தனா். கோவை, திருப்பூா் பகுதிகளில் கொலையாளிகளைத் தேடி தனிப்படைப் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், விக்னேஷ் கொலையில் தொடா்புடையதாக 2 இளைஞா்கள், கோவை 2ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை காலை சரண் அடைந்தனா். விசாரணையில், அவா்கள் கோவை தெற்கு வீதி தட்சன் தோட்டம் பகுதியைச் சோ்ந்த அபிவிஷ்ணு (22), மசக்காளி பாளையம் பெரியாா் நகரைச் சோ்ந்த சிங்காரவேலன்(21) என்பது தெரியவந்தது. இக்கொலையில் தொடா்புடைய மேலும் 2 போ் குறித்து விசாரணை மேற்கொள்ள அபிவிஷ்ணு, சிங்காரவேலனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT