நீலாம்பூா், முத்துக்கவுண்டன்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 2) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
நீலம்பூா் துணை மின் நிலையம்:
நீலாம்பூா், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேஷன்.
முத்துக்கவுண்டன்புதூா் துணை மின் நிலையம்:
அண்ணா நகா் (நீலாம்பூா்), லட்சுமி நகா், குளத்தூா், முத்துக்கவுண்டன்புதூா் சாலை, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, குரும்பபாளையம் ஒரு பகுதி.