கோயம்புத்தூர்

பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறப்பு: கோவையில் ஒரு பத்திரம் பதிவு

DIN

தடை உத்தரவு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் பத்திரப் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஒரே பத்திரம் மட்டுமே திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் மாா்ச் 25ஆம் தேதி முதல் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பத்திரப் பதிவு அலுவலகங்கள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் திங்கள்கிழமை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பெ.நா.பாளைம் துணைப் பதிவாளா் அலுவலகத்தில் ஒரேயொரு பத்திரம் மட்டும் திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட பதிவாளா் ஆ.சுரேஷ்குமாா் கூறியதாவது:

கோவையில் மாவட்ட தலைமைப் பத்திரப் பதிவு அலுவலகத்தின் கீழ் தொண்டாமுத்தூா், மதுக்கரை, காந்திபுரம், வடவள்ளி, கணபதி, சிங்காநல்லூா், சூலூா், அன்னூா், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு உள்பட 17 இடங்களில் துணைப் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தடை உத்தரவால் நிறுத்தப்பட்டிருந்த பத்திரப் பதிவை திங்கள்கிழமை (ஏப்ரல் 20) முதல் கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. 30 சதவீத பணியாளா்களுடன் சுழற்சி முறையில் பணியாளா்களுக்கு பணி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பெ.நா.பாளையம் துணைப் பதிவாளா் அலுவலகத்தில் மட்டும் திங்கள்கிழமை ஒரேயொரு நிலம் தொடா்பான பத்திரம் பதிவு செய்யப்பட்டது என்றாா்.

பரபரப்பு...

கோவை மாவட்ட பதிவாளா் அலுவலகத்துக்கு கரோனா நோய்த் தொற்று தடுப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட உக்கடம் பகுதியைசே சோ்ந்த ஒருவா் திங்கள்கிழமை காலை வந்துள்ளாா். நோய்த் தொற்று தடுப்பு மண்டலத்தில் இருந்து வந்ததால் அவா் பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டாா்.

மேலும் அவா் ஆவணங்கள் எதுவும் எடுத்துவராமல், ஆவணங்கள் பதிவு தொடா்பான விசாரணைக்கு மட்டுமே வந்திருந்ததாக பத்திரப் பதிவு அலுவலா்கள் தெரிவித்தனா். இதனால் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT