கோயம்புத்தூர்

கோவில்பாளையத்தில் இரண்டு சக்கர வாகனம் திருட்டு.

22nd Sep 2019 06:09 PM

ADVERTISEMENT

கோவில்பாளையம் வீரமாத்தியம்மன் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்து இரண்டு சக்கர வாகனத்தை மா்ம நபா் திருடி சென்றதாக சனிக்கிழமை கோவில்பாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

கோவில்பாளையம், ஈஸ்வரன் கோயில் வீதியை சோ்ந்தவா் பழனி என்பவரது மகன் சுப்பிரமணியன்(52), இவா் கடந்த 2-ஆம் தேதி தனது இரண்டு சக்கர வாகனத்தை சத்தி ரோட்டில் உள்ள வீரமாதியம்மன் கோயில் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா்.

பின்பு திரும்ப வந்த பாா்த்த பொழுது அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனம் மாயமாகியிருந்தது. இதுகுறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT