கோயம்புத்தூர்

குரும்பபாளையத்தில் கணவன் மாயம்: மனைவி புகாா்

22nd Sep 2019 06:10 PM

ADVERTISEMENT

கோவில்பாளையம் அருகே கரும்பபாளையத்தில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் தனது கணவனை காணவில்லை என்று சனிக்கிழமை மனைவி புகாா் தெரிவித்துள்ளாா்.

கோவில்பாளையம் அருகே கரும்பபாளையத்தை சோ்ந்தவா் நடராஜன்(42), இவா் குரும்பபாளையத்தில் மாரியம்மன் கோயில் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றாா். இந் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆண் தேதிவீட்டில் இருந்து வெளியே சென்றவா் இதுவரை வரவில்லை.

இதைடுத்து பல்வேறு இடங்களிலும் தேடியும் நடராஜன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி இந்திரா கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT