கோயம்புத்தூர்

அனுமந்தராயசாமி கோயிலில் பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சி

22nd Sep 2019 05:44 AM

ADVERTISEMENT


மேட்டுப்பாளையம் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் சார்பில் இடுகம்பாளையம் அனுமந்தராயசாமி கோயில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழாவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
 சிறுமுகை இடுகம்பாளையம் அனுமந்தராயசாமி கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனுமந்தராயருக்கு காலை 5 மணிக்கு திருமண் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 7 மணிக்கு மகாதீபராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அனுமந்தராயர் அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கரும், செயல் அலுவலருமான ராமஜோதி செய்திருந்தார். விழாவையொட்டி மேட்டுப்பாளையம் கல்லாறு சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT