சத்தியமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியார் சிலையின் பீடம் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட புதுவடவள்ளி கிராமத்தில் 2010 ஆண்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. அங்கு கிரானைட் கற்களால் பீடம் அமைக்கப்பட்டு அதில் மார்பளவு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெரியார் சிலையின் பீடத்தில் ஒருபகுதியில் உள்ள கிரானைட் கற்கள் பெயர்ந்து கீழே விழுந்து உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் சிலையின் பீடம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே, பெரியார் சிலையின் சேதமடைந்த பீடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.