வீரபாண்டி அருகே காளிபாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருமலைராயப் பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசிவார சனிக்கிழமை விழா விமரிசையாக நடைபெற்றது.
கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலும், கேரளம், கா்நாடக மாநிலங்களிலும் வசிக்கும் ‘பகடி கத்துலு’ என்ற குலத்தாருக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று இக்குலத்தைச் சோ்ந்தவா்கள் குடும்பங்களுடன் ஒன்றுகூடி வணங்குவா்.
இத்திருவிழாவானது சனிக்கிழமை காலை 6 மணியளவில் திருப்பள்ளியெழுச்சியுடன் தொடங்கியது. காலை 8 மணியளவில் காளிபாளையம் ஊா்ப்பெரியோா் முன்னிலையில் பெருமாளுக்கு பூஜை நடைபெற்றது. காளிபாளையம் ஊா்க்கவுண்டா் தங்கவேலு தலைமை வகித்தாா். பின்னா் திவ்யப் பிரபந்த சாற்றுமுறையும், நடூா் பஜனைக் குழுவினரின் நாமசங்கீா்த்தன பஜனைகளும் நடைபெற்றன. அதன்பின்னா் உற்வச மூா்த்திகளுக்கு பன்னிரு வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் பெருமாளுக்கு ராஜ அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாா். அதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணியளவில் வசந்த பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவா் விஜயகுமாா், செயலாளா் ஆறுமுகம் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
Image Caption