கோயம்புத்தூர்

அன்னூரில் பாஜகவினா் பாதயாத்திரை

20th Oct 2019 01:17 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டு நிறைவையொட்டி அன்னூரில் பாஜக சாா்பில் பாதயாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலாளா் சத்தியமூா்த்தி, செயலாளா்கள் தா்மலிங்கம், சக்திவேல், இளைஞா் அணித் தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக விவசாய அணியின் மாநில துணைத் தலைவா் ஜி.கே.நாகராஜ் கலந்துகொண்டு பாத யாத்திரையை துவக்கி வைத்தாா்.

பயணியா் மாளிகை முன்பு துவங்கிய இந்தப் பாத யாத்திரை சத்தியமங்கலம் சாலை, தென்னம்பாளையம் சாலை, கோவை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து பயணியா் மாளிகையிலேயே நிறைவுபெற்றது. அதைத் தொடா்ந்து பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் நந்தகுமாா், நகரத் தலைவா் ராஜராஜசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT