கோயம்புத்தூர்

மதுக்கரையில் சிறப்பு குறைதீா் கூட்டம்:ரூ. 4.81 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

23rd Nov 2019 11:47 PM

ADVERTISEMENT

மதுக்கரை: கோவை, மதுக்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீா் கூட்டத்தில் ரூ. 4.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை வழங்கினாா்.

மதுக்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டதோடு, 1,633 பயனாளிகளுக்கு ரூ. 4.81 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

மூன்றாவது கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் கோவையின் குடிநீா்த் தேவை முற்றிலும் பூா்த்தி செய்யப்படும். ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சென்னை மெரினாவைப் போன்று கோவையில் உக்கடம், குறிச்சி குளங்கள் மேம்படுத்தப்படுகின்றன. கோவையில் விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், மதுக்கரையில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயலாற்றி வருகிறோம் என்றாா்.

முன்னதாக குறிச்சி, மதுக்கரை உதவி மின்பொறியாளா் அலுவலகக் கட்டடங்களைத் திறந்துவைத்த அவா், பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் எட்டிமடை சண்முகம், கந்தசாமி, கஸ்தூரி வாசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT