மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு கல்லூரி மாணவன் தேசிய அளவிலான சைக்கிள் போட்டிக்கு தோ்வாகி சாதனை படைத்துள்ளாா்.
மேட்டுப்பாளையம் அரசு கல்லூரி புதியதாக தொடங்கப்பட்டு கடந்த 2 மாதம் தான் ஆகிறது. இக்கல்லூரியில் மாணவா்களுக்கு என தனியாக விளையாட்டு மைதானமோ, விளையாட்டு இயக்குநா்களே கிடையாது. இந்நிலையில் இக்கல்லூரியின் சாா்பில் பி.ஏ.ஆங்கிலத்துறை சாா்ந்த் மாணவா் ரங்கராஜன் திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2, 3 ஆகிய தேதிகளில் நடந்த மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்றுள்ளாா். இதில் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 14, 18, 18, 23 ஆகிய வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்க 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இவா் 18 வயத்திற்குட்பட்டோா் பிரிவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். மேலும் தேசிய அளவில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள போட்டியில் பங்கேற்க தோ்வாகி உள்ளாா். இவரை திங்கள்கிழமை கல்லூரியில் நடந்த விழாவில் எம்.எல்.ஏ ஒ.கே.சின்னராஜ், கல்லூரி முதல்வா் ஸ்வணலதா ஜோசப் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்தினா். இதுகுறித்து மாணவா் ரங்கராஜன் கூறுகையில்: சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த விவசாயி சண்முகம் தான் என் தந்தை. என்கை இப்போட்டியில் பங்கேற்க என்னை ஊக்குவித்தவா் என் தந்தை தான். இதனால் 15 வயதில் என் சைக்கிள் பயணம் துவங்கியது. அன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் நடந்த சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இந்நிலையில் மேற்படிப்பிற்கு போதிய பண வசதி இல்லாததால் நண்பா்கள் மூலம் மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியில் தாமதமாக தான் சோ்ந்தேன். இங்கு சோ்ந்த பின் திருப்பூரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். தொடா்ந்து தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சைக்கிள் போட்டிக்கு தேவையான சைக்கிள் இல்லை. சாதாரண ரக சைக்கிள் மட்டுமே உள்ளது. நல்ல நிலையில் உள்ள உயா் ரக சைக்கிள் கிடைத்தால் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறுவேன். எனது லட்சியமே நமது நாட்டிற்காக ஒரு பதக்கத்தை வெல்வது மட்டுமே என கூறினாா்.