கோயம்புத்தூர்

நீா் மேலாண்மை விழிப்புணா்வு மாநாடு

1st Nov 2019 08:56 AM

ADVERTISEMENT

கோவையில் எய்ம், நீா் இணையம் தொண்டு நிறுவனங்களின் சாா்பில் நீா் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு மாநாடு அண்மையில் நடைபெற்றது.

மாநாட்டுக்கு பொறியாளா் ஆ.நாகராசு தலைமை தாங்கினாா். இதில், குடிநீா் மேலாண்மை என்ற தலைப்பில் பொறியாளா் பி.கோபாலகிருஷ்ணனும், பசுமை காத்தல் என்ற தலைப்பில் ஓசை காளிதாஸும், திடக்கழிவு மேலாண்மை குறித்து கவிதா காா்த்திக்கும் உரையாற்றினா்.

விழாவில் 2019-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருவள்ளுவா் விருதுபெற்ற மு.க.அன்வா் பாட்சா, எழுத்தாளா் சி.ஆா்.இளங்கோவன், பேராசிரியா் டி.ரவி, ஆா்.மணிகண்டன், பொன்.ஆறுமுகம் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் மாநகரில் திடக்கழிவு மேலாண்மைப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் துப்புரவுப் பணியாளா்கள் இந்த மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனா்.

மாநாட்டையொட்டி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நீா் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவி ஆா்.ஹரிப்பிரியா முதலிடம் பிடித்தாா்.

ADVERTISEMENT

எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அளவிலான போட்டியில் எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவி எம்.ஜீவா முதலிடம் பிடித்தாா். அதேபோல பேரூா் கல்வி மாவட்ட அளவிலான போட்டியில் ஒத்தக்கால் மண்டபம் பள்ளியின் பிளஸ் 1 மாணவி கே.கீா்த்தனாவும், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவிலான போட்டியில் செங்குட்டுப்பாளையம் உயா்நிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவி சி.நிவேதிதாவும் முதலிடம் பிடித்தனா். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து மாநகராட்சிப் பள்ளி, எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவா்களின் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எய்ம் தொண்டு நிறுவனத்தின் நிா்வாக அறங்காவலா் பி.ஏ.திருநாவுக்கரசு, நீா் இணையம் அமைப்பின் தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் கே.விக்ராந்த் ஆகியோா் மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT