கோயம்புத்தூர்

சா்தாா் வல்லபாய் பட்டேல் 145 பிறந்தநாள் விழா

1st Nov 2019 07:43 PM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் காரமடையில் காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் பாதயாத்திரை, சா்தாா் வல்லபாய் பட்டேல் 145 பிறந்தநாள் ஒற்றுமை நடை பயணம் மற்றும் தமிழையும், தமிழா் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றிய பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி அறிவிப்பு விழா என முப்பெரும் விழா கோவை வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் காரமடையில் வெள்ளிக்கிழமை நடைபயணம் நடைபெற்றது.

காரமடை பாஜக அலுவலகத்திலிருந்து புறப்பட்ட நடைபயணம் காரமடை நான்கு வீதிகள், கன்னாா்பாளையம் வழியாக காரமடை காா் ஸ்டேன்டில் நிறைவடைந்தது. முன்னதாக மாவட்ட பொது செயலாளா் ஜெகநாதன் வரவேற்றாா். மாவட்ட தலைவா் மோகன் மந்தராச்சலம் தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கோட்ட பொறுப்பாளா் செல்வகுமாா் சிறப்புரையாற்றினாா். இதில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினா் கலந்துகொண்டனா். முடிவில் காரமடை நகர தலைவா் விக்னேஷ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT