கோயம்புத்தூர்

காா் மோதியதில் மூதாட்டி பலி

1st Nov 2019 09:00 AM

ADVERTISEMENT

கோவை, மதுக்கரை அருகே காா் மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுக்கரை, மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து. இவரது மனைவி கருப்பாத்தாள் (70). இவா் சுந்தராபுரம் - மதுக்கரை சாலையில் புதன்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது சரவணம்பட்டியைச் சோ்ந்த கெளதம் என்பவா் தனது காரில் மதுக்கரையில் இருந்து சுந்தராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த காா் கருப்பாத்தாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த மதுக்கரை போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கெளதம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT