சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை வித்யா விகாஸ் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
இப்பள்ளியில் 193 மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 477 மதிப்பெண் ஒருவரும், 475 மதிப்பெண் ஒருவரும், 474 மதிப்பெண் ஒருவரும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பள்ளியின் அறங்காவலர்கள், செயல் இயக்குநர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டுத் தெரிவித்தனர்.