பெரியநாயக்கன்பாளையம் ஜி.எஸ்.ஆர். மெட்ரிக். பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 61 மாணவர்களும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய 61 மாணவர்களில் 2 மாணவர்கள் 460-க்கு மேலும், 6 மாணவர்கள் 450-க்கு மேலும், 31 மாணவர்கள் 400-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பள்ளியின் தாளாளர் ஆர்.மருதாச்சலம், முதல்வர் ஆர்.விசாலாட்சி, செயலர் எம்.சஞ்சீவ் உள்ளிட்டோர் பாராட்டினர்.