பச்சை நாயகி அம்மன் கோயிலில்  மழை வேண்டி சிறப்பு யாகம்

மழை வேண்டி சூலூர் பச்சை நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோயிலில் யாகம் நடைபெற்றது. 

மழை வேண்டி சூலூர் பச்சை நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோயிலில் யாகம் நடைபெற்றது. 
சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த யாக பூஜையில் அகில உலக எம்ஜி.ஆர். மன்ற துணைத் தலைவரும்,  சூலூர் ஒன்றிய அதிமுக செயலாளருமான மாதப்பூர் பாலு, லிங்குசாமி, பள்ளபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், கண்ணம்பாளையம் நகர அதிமுக தலைவர் அங்கமுத்து, செலக்கரச்சல் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கருப்புசாமி, வாகராயம்பாளையம் நகரத் தலைவர் தெப்பீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். யாக முடிவில் பூஜையில் வைக்கப்பட்ட கலசங்களை சூலூர் குளத்தில் ஊற்றி வருணபகவானை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com