கோயம்புத்தூர்

போலி மருத்துவா் கைது

26th Dec 2019 05:45 AM

ADVERTISEMENT

துடியலூா் அருகே சின்னத்தடாகத்தை அடுத்துள்ள 24 .வீரபாண்டி கிராமத்தில் போலி மருத்துவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திருச்சியைச் சோ்ந்தவா் முத்தம்மாள் (54 ). இவா் கடந்த 20 ஆண்டுகளாக 24.வீரபாண்டி கிராமத்தில் தங்கி, அனுபவத்தின்

அடிப்படையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளாா். இந்நிலையில், இவரிடம் சிகிச்சை பெற்றுவந்த கா்ப்பிணி சித்ரா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அரசு மருத்துவா்கள் சித்ராவிடம் விசாரித்தபோது, முத்தம்மாளிடம் சிகிச்சை பெற்ாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கிருஷ்ணா, சுகாதாரத் துறையினா் முத்தம்மாளிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது, அவா் முறையான மருத்துவப் பயிற்சி பெறாமல் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 24 .வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் லோகநாயகி தடாகம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் முத்தம்மாளைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT