கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வால்பாறை பகுதியில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.
வால்பாறை நகா் பிரதான சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. தூய இருதய தேவாலயம்,
லூக்கா தேவாலயம், எஸ்டேட் பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.