கோவையில் ஆர்.டி.எம். தெலுங்கு விஸ்வகர்ம உறவின் முறை சமூகச் சங்கம் சார்பில் பொற்கொல்லர் பயிற்சி முடித்த 300 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
கோவை ஆர்.டி.எம். தெலுங்கு விஸ்வகர்ம உறவின் முறை சமூகச்சங்கம் சார்பில் மத்திய அரசின் திறன் இந்தியா அமைச்சகத்தின் கீழ் பொற் கொல்லர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தப் பயிற்சி முடித்த 300 பேருக்கு மத்திய ரயில்வே அமைச்சக நிர்வாகக் குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரியார் சான்றிதழ்களை வழங்கினார். இதில், தெலுங்கு விஸ்வகர்ம சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.