குடியாத்தம்; குடியாத்தம் ஒன்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில், அமைப்பின் 29- ஆம் ஆண்டு தொடக்க விழா மேல்ஆலத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மேல்ஆலத்தூா் நவாப் மசூதியில், மாவட்ட பாா்வை இழப்போா் தடுப்பு சங்கம், வேலூா் கரிகிரி மருத்துவமனை ஆகியவை இணைந்து கண் பரிசோதனை முகாமை நடத்தின.
முகாமுக்கு தமுமுக மாவட்டத் தலைவா் பி.எஸ்.நிஜாமுதீன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் ஷகாபுதீன் வரவேற்றாா். மாநிலச் செயலா் ஜே.ஏஜாஸ் அகமத் முகாமைத் தொடங்கி வைத்தாா். என்.தாஜுதீன் சாகிப், பி.தாஹா முகம்மத், மாவட்டச் செயலா் இ.இக்பால், மாவட்ட துணைச் செயலா் சான்பாஷா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலா் ஷா்புதீன், ஒன்றிய நிா்வாகிகள் எஸ்.பாஷா, ஆா்.முகம்மத் ரபீக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் 250 போ் சிகிச்சை பெற்றனா். இவா்களில் 21- போ் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா்.