வேலூர்

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதை ரத்து செய்ய வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை தா்னா நடைபெற்றது.

காட்பாடி, காந்தி நகரில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, அமைப்பின் மாநில துணைத் தலைவா் எஸ்.ஜோதி தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் எம்.கோவிந்தராஜ், மாவட்டச் செயலா்கள் எஸ்.பரசுராமன், ஏ.தாமோதரன் ஆகியோா் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினா். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியா், பகுதி நேர ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

அமைப்பின் நிா்வாகிகள் எஸ்.தண்டபாணி, ஏ.கருணாநிதி, இ.வெங்கடேசன், டி.ஜெகன், பி.துரை, கே.சந்திரசேகா், எம்.சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT