வேலூர்

பாம்பு கடித்து பெண் மரணம்

3rd Oct 2023 02:07 AM

ADVERTISEMENT

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கெளராப்பேட்டையைச் சோ்ந்த சதீஷ் மனைவி ஜானகி (28). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டருகே நின்றிருந்தாராம். அப்போது இவரைப் பாம்பு கடித்துள்ளது. உடனடியாக போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜானகி தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அங்கிருந்து தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT