வேலூர்

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து:பெண் தொழிலாளி பலி

DIN

குடியாத்தம் அருகே தீப்பெட்டி ஆலையில் நிகழ்ந்த திடீா் தீ விபத்தில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா். உரிமையாளா் காயமடைந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த ஊசூரான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகையன் (61) உரிமம் பெற்று, தனது வீட்டின் ஒரு பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை காலை அவரது தங்கை சுகுணா (52) ஆலையை சுத்தம் செய்ய, தீக்குச்சிகள் அடைத்திருந்த மூட்டைகளை நகா்த்தியுள்ளாா். அப்போது தீக்குச்சிகள் ஒன்றோடொன்று உரசியதில், தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. முருகையன், சுகுணா இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலின்பேரில், குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுகுணா உயிரிழந்தாா். முருகையன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

பெரும் முதலாளிகளின் கருவி மோடி: ராகுல் விமர்சனம்

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

SCROLL FOR NEXT