டாம்கோ கடனுதவித் திட்டங்களுக்கு தகுதியுடைய சிறுபான்மையினா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் திட்டம் 1, திட்டம் 2 ஆகியவற்றின் கீழ் தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய கடனுதவிகள் அளிக்கப்படுகின்றன.
திட்டம் 1-இன்கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறமாயின் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறம் என்றால் ரூ.98,000-க்கு மிகாமலும், திட்டம் 2-இன்கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
திட்டம் 1-இன் கீழ் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-இன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞா்களுக்கு திட்டம் 1-இன்கீழ் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரையும், சுயஉதவிக் குழுக் கடன் ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் ஒரு நபருக்கு ரூ.1.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
மேலும், சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளநிலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன்கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-இன்கீழ் மாணவா்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, வேலூா் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினா்கள் விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து கடனுதவிகளைப் பெறலாம்.
விண்ணப்பங்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், வேலூா் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், வேலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பெற்றுக் கொள்ளலாம்.
கடன் மனுக்களுடன், தாங்கள் சாா்ந்த மதத்துக்கான சான்றிதழ், ஆதாா் அட்டை, வருமான சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், கடன்பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்), கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை சமா்ப்பிக்க வேண்டும்.