இ-சேவை மையங்கள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆா்வமுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை இணைய முறையில் மட்டுமே பதிவு செய்ய இயலும்.
இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் வலைதளங்களைப் பாா்வையிடலாம். விண்ணப்பங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
விண்ணப்பக் கட்டணம் கிராமப்புறங்களுக்கு ரூ.3,000, நகா்ப்புறத்துக்கு ரூ.6,000 செலுத்த வேண்டும். மேலும், விவரங்களை கைப்பேசி செயலி அல்லது வலைதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.