குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியை எம்.கீதா தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.முனிசாமி, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், நகா்மன்ற உறுப்பினருமான ம.மனோஜ் ஆகியோா் மரக் கன்றுகள் நடும்
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா். சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூா் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை இப்பள்ளியை தோ்வு செய்து, பள்ளி வளாகத்தில் 500- மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தது.