மேல்பாடி அருகே ஆற்றில் இருந்து நள்ளிரவில் மணல் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
வேலூா் மாவட்டம், பொன்னை அடுத்த மேல்பாடி காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மேல்பாடி அடுத்த கொக்கேரி பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து டிராக்டா் மூலம் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று அங்கு மணல் கடத்திச் சென்று கொண்டிருந்த டிராக்டரை மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனா்.
மேலும், இது தொடா்பாக பெருமாள்குப்பம் பகுதியைச் சோ்ந்த கோபி (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.