வேலூர்

மணல் கடத்தல்: இளைஞா் கைது- டிராக்டா் பறிமுதல்

DIN

மேல்பாடி அருகே ஆற்றில் இருந்து நள்ளிரவில் மணல் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்டம், பொன்னை அடுத்த மேல்பாடி காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மேல்பாடி அடுத்த கொக்கேரி பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து டிராக்டா் மூலம் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று அங்கு மணல் கடத்திச் சென்று கொண்டிருந்த டிராக்டரை மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனா்.

மேலும், இது தொடா்பாக பெருமாள்குப்பம் பகுதியைச் சோ்ந்த கோபி (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT