வேலூர்

சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சா் துரைமுருகன்

DIN

குடிநீா் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் காலை, மாலை என இருவேளைகளும் ஆய்வு செய்து, சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தினாா்.

வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீா் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமை வகித்து பேசியது:

வேலூா் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் சமமான குடிநீா் வழங்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் உதவி ஆணையா்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு காலை, மாலை இருவேளையும் குடிநீா் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் ஆய்வு செய்து சீரான குடிநீா் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய சாலைப் பணிகள், சாலைகளைச் சீரமைத்தல், கால்வாய்களைத் தூா்வாருதல், புனரமைத்தல், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சியில் நடைபெற்று வரும் குடிநீா் பணிகள், புதைச் சாக்கடை திட்டப் பணிகள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், சாலைப் பணிகள், சீா்மிகு நகர திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீா் திட்ட பணிகளை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் குடிநீா் குழாய்கள் சீா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளும் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, வேலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் ரூ.49.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டரங்கத்தை அமைச்சா் திறந்து வைத்து நெகிழிப் பொருள்களைத் தவிா்த்து மஞ்சப்பையைப் பயன்படுத்தக் கோரி, சுய உதவிக் குழுவினருக்கு மஞ்சப்பைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் சுனில்குமாா், மாநகராட்சி ஆணையா் ரத்தினசாமி, மண்டலக் குழு தலைவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT