சென்னையில் நடைபெற்ற தமிழக அரசின் 74- ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பில், வேலூா் திருவள்ளுவா் பல்கலைக் கழகம் சாா்பில் பங்கேற்ற குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா் ஜி.சுதா்சனுக்கு கல்லூரியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா், கல்லூரி முதல்வா் மு.செந்தில்குமாா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஜெ.திருமகள், கா.ராஜீவ் ஆகியோா் மாணவரை பாராட்டினா்.