வேலூர்

பாலமதி மலை இடுக்கில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்: கணவா் கைது

DIN

வேலூா் பாலமதி மலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் பாலமதி மலையிலுள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடப்பது குறித்து பாகாயம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா்அங்கு சென்று பாா்த்தபோது, சுடிதாா் அணிந்து, கழுத்தில் தாலியுடன் இளம்பெண் சடலம் கிடந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா்.

அதில், கொலை செய்யப்பட்டவா் சிதம்பரத்தைச் சோ்ந்த குணப்பிரியா (22) என்பது தெரியவந்தது. இது குறித்து, சிதம்பரத்திலுள்ளஅவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனா். நேரில் வந்த அவா்கள், அது குணப்பிரியாவின் உடல்தான் என்பதை உறுதிப்படுத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், குணப்பிரியாவின் கணவரான காவல் உதவி ஆய்வாளா் ஒருவரின் மகன் காா்த்தி (22) மனைவி குணப்பிரியாவை பாலமதி மலைக்கு அழைத்துச் சென்று, அடித்துக் கொலை செய்து, மலையில் இருந்து தள்ளிவிட்டது தெரியவந்தது.

இது குறித்து, பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்தியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

SCROLL FOR NEXT