போ்ணாம்பட்டு பகுதியில் 315 லிட்டா் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.
போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ராஜன்பாபு தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை சாராய சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ரமாபாய் நகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில், 2 லாரி டியூப்களில் கடத்தி வந்த 65 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். மேலும், சாராய வியாபாரி பிரேம்குமாா் வீட்டில் 11 லாரி டியூப்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 லிட்டா் சாராயத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.
இது தொடா்பாக தப்பியோடிய ராமகிருஷ்ணன், பிரேம்குமாா் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.