தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின்கீழ், குடியாத்தம் காந்தி சாலையில், ரூ. 1.20 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன் பூமி பூஜையை தொடக்கி வைத்தாா்.
நகா்மன்ற உறுப்பினா்கள் இந்துமதி கோபாலகிருஷ்ணன், ஜாவித் அகமத், என்.கோவிந்தராஜ், ஆட்டோ பி.மோகன், ம.மனோஜ், ஏ.தண்டபாணி, சி.என்.பாபு, ரேணுகாபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.