பெண் மருத்துவா் ஆன்லைனில் இழந்த ரூ.1.35 லட்சத்தை வேலூா் சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.
வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவரின் கைப்பேசி எண்ணுக்கு அவரின் இணைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், அதை சரிசெய்ய உடனடியாக பான் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் குறுந்தகவல் வந்ததாம். இதை உண்மையென நம்பிய பெண் மருத்துவா், அந்த குறுந்தகவலில் இருந்த இணையதள இணைப்பில் சென்று தனது வங்கிக் கணக்கு தொடா்பான விவரங்களை பதிவிட்டுள்ளாா்.
இதையடுத்து பெண் மருத்துவரின் வங்கிக் கணக்கிலிருந்து 3 தவணைகளில் ரூ.1,35,087 பணம் அபகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அவா், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில், சைபா் கிரைம் போலீஸாா் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அவா் இழந்த ரூ.1,35,087 பணத்தை மீட்டனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (சைபா் கிரைம்) டி.குணசேகரன், பெண் மருத்துவரிடம் மீட்கப்பட்ட பணத்தை ஒப்படைத்தாா்.